என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

27 December 2007

மௌனத்தின் அலைவரிசை

கிறுக்குப்பாளயத்திலிருந்து இரு பரலாங் தூரத்தில் இருக்கும் அந்த மேட்டுப்பகுதியில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறது வேந்தன் பொறியில் கல்லூரி. கருவேள மரங்களின் வரிசை, கூச்சலிடும் குருவிக் கூட்டம், எங்கோ ஓடிக்கொண்டிருக்கும் தொழிற்சாலையின் லேசான மோட்டார் சத்தம், நெடுஞ்சாலையில் ஓடும் வாகன ஒலி என்று இயற்கையும் செயற்க்கயுமாய் ஆன அழகான கிராமம். கிராமம் என்றால் கல்லூரிக்கென தனியாக உருவானது போல் இருக்கும்.சொர்ப்பமாகத் தான் ஜனத்தொகை.

அப்போது எங்களுடன் கல்லூரியில் படித்து கொண்டிருந்தவர்கள் தான் ரமேஷும் கணேஷும். வாழ்வில் எதையோ தொலைத்து விட்டு தேடிக் கொன்டிருப்பவர்களில் இவர்களும் அடக்கம். ரமேஷ் ஆத்திகம்,ஆனால் அதிகம் இல்லை. கணேஷ் நாத்திகம். ரமேஷ் கரும்பு நிறம் என்றால் கணேஷ் சந்தனம். உடலியல் ரீதியாக எந்த சம்பந்தமும் இல்லை தான். ஆனால் மனதில் நிலவும் மௌனத்தின் அலைவரிசையின் அளவு சமமாக இருந்ததால் ஏற்பட்ட நட்பு என்பது என் கணிப்பு. ரமேஷ் அவ்வளவாக படிப்பதில்லை எல்லாமே கேள்வி ஞானம் தான். கணேஷ் படிப்பில் கெட்டி. அதனாலேயே மற்றவர்களிடம் பேரன்பும் பெருமதிப்பும். இருவரும் பேச தொடங்கினால் நாள் கணக்கு தெரியாமல் அரட்டை அடிதொக்கொண்டு இருப்பார்கள். கல்லூரிக் காலம் முழுவதும் ஒன்றாகவே திறிந்தார்கள். பொறியியலை விட வாழ்வியல் நுணுக்கங்களை தான் அதிகம் அலசுவார்கள். சினிமா,அரசியல்,வரலாறு,புவியல்,புள்ளிவிவரம்,பொருளாதாரம் என்று இவர்கள் பட்டியல் நீளும். ஆனால் பேசுவதிலும் கேட்பதிலும் கவனம் இருவரிடமும் அகலம். அவர்களுக்கு காரல் மார்க்ஸ் & ஏங்கல்ஸ் என்று நினைப்பு என்று கூட நாங்கள் நக்கல் செய்ததுண்டு. அவர்களின் நட்பு வட்டமும் கூட பெரியது தான் நான் உட்பட. இருந்தாலும் அதிகம் யாரிடமும் ஒட்டுவதில்லை. ரமேஷிற்கு எதிலும் அக்கறை கொஞ்சம் அதிகம். பொதுவாகவே நண்பர்களிடத்தில் அக்கறை செலுத்துபவன். கொஞ்சம் முரடன் போல் தொற்றமளிப்பதனால் அவனிடம் புதிய மனிதர்கள் நெருங்குவது கடினம், பெண்களும் சரி ஆண்களும் சரி. கணேஷ் நகரத்திற்குள் வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ அவனுக்கு நாகரிகம் தெரியும். ரமேஷ் கிராமம் என்று சொல்ல முடியாது ஆனால் அவன் முன்பு பார்த்திராத விஷயங்கள் நிரம்ப இருந்தது. அங்கு தான் கண்டவையும் கற்றவையும் எண்ணில், நிறையவே அடங்கும். தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்வான் பிறகு மாட்டிக்கொள்வான். அறை நண்பனுடன் வேலி தாண்டியது, பரிச்சையில் பிட் அடித்து மாட்டிக்கொண்டது, வகுப்பறையில் யாரோ ராகெட் விட இவன் மாட்டிக்கொண்டது, கலவரம் நடந்த இடத்தில் நின்றதற்காக பிடிபட்டது, இப்படி இவன் செய்த சாதனைகளுக்கு விருதே கொடுக்கலாம். இப்படி குற்றங்கள் நிறைந்த வாழ்கை இவனுடையது. இப்படி மட்டிகொள்வதில் இவன் இன்னொரு கைப்பிள்ளை. இப்படி எதுவும் இல்லாமல் தொட்டதெல்லாம் துலங்கும் ராசி உடையவன் கணேஷ். பரிச்சை ஆகட்டும், கட் அடிப்பதில் ஆகட்டும் எதற்கும் ஒரு வரை முறை உண்டு. நிறைய படிக்கும் அவனுக்கு படிப்பை முடித்துவிட்டு உடனே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை. ரமேஷுக்கும் சூழ்நிலை அப்படித்தான் ஆனால் அவன் அவனவன் போக்கில் எப்போதும். பத்தாத குறைக்கு வர்ஷா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு காதல் வேறு அவனை சீரழிக்க, பித்துபிடிக்காத குறை. கோட்பாடு இல்லாத காதல் எதையும் பெற்றுத்தராது என்பது அவனுக்கு மட்டுமன்று எங்களிலும் பலருக்கு விளங்காமல் போயிற்று. பெண்ணுடன் நாகரிகமாக பேச பழக தெரியாதவனுக்கு இதெல்லாம் தேவையா என்று கூட தோன்றும். எப்படியும் முறிந்து போகாது என்ற நம்பிக்கையில் அலைமேல் விழுந்து விளையாடும் நுரையாய் ரமேஷ். அவன் கல்லூரிக் காலம் முழுவதும் அவளுக்கென கவிதை எழுதுவதும் கடிதம் எழுதுவதிலும் முடிந்து போயிற்று. நிறைய கவிதை கிறுக்குவான். கல்லூரியும், காதலும் முடிந்தவுடன் அவன் கவிஞர் வாழ்க்கையும் முடிந்துவிட்டது. ஆனால் காதலிக்கும் ஒவோருவனும் வாழ்கையே கவிதையாக மாறிவிட்டதாக நினைத்துக்கொள்வது சகஜம்தானே. ஆல் பாதி ஆடை பாதி என்பார்கள் ஆனால் ரமேஷுக்கு இரண்டுமே கொஞ்சம் பலவீனம். எதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும் அது அவனிடம் சுத்தமாக இல்லை அப்போது. புத்திசாலித்தனம், சுயபுத்தி, சொல்புத்தி எதுவும் கிடையாது. இப்படி எந்த தகுதியும் இல்லாதவன் எப்படி தான் ஜீவகரணம் செய்யப்போறானோ என்ற ஒரு பெரிய கேள்விக்குறி என்னை மேலும் யோசிக்க வைத்தது. அவன் யோசித்ததாக தெரியவில்லை. ஆனால் அவன் கவிதை வாழ்கை எல்லோர்க்கும் பிடித்திருந்தது. எதையும் கவிதையாக பார்க்கிற உணர்வு. எந்த ஒரு நிகழ்ச்சியையும் திரைகதையில் சொல்லும் அவன் பாங்கு. இப்படி ஒரு சில நல்ல விஷயங்களும் உண்டு.


கணேஷுக்கும் ரமேஷுக்கும் ஏறக்குறைய ஒரே சிந்தனை. இருவருக்கும் புலம்பல் செவியாய் இருந்தவள் வர்ஷா. இடையில் ரமேஷுக்கு ஏற்பட்ட பல உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு விடை தேடிக் கொண்டிருந்தான். ஆகையால் மற்ற இருவரின் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தான். பரிச்சை நேரம் நெருங்கியதும் முழுமையாக துண்டிக்க பட்டுவிட்டான். சில காரணங்களற்ற விஷயங்களால் உருகி மருகி கொண்டிருந்தான். பரிட்சை முடிந்தது. ஒரு மழை மாதம் முடிந்து கல்லூரிக்கு திரும்பிய முதல் நாள் ரமேஷ் வர்ஷவை சந்தித்தான். அவன் கடிகாரத்தில் முற்கள் இரண்டும் ஒரு சேர இருந்தது. முற்கள் விலக விலக பேச்சும் விலகியது அவனும் விலக்கப் பட்டான். சிறகு வெட்டப்பட்ட காக்கை போல் திடுக்கிட திரும்பி வந்தான். அடிபட்டு விழுந்ததை பார்க்க ஓடி வந்த காக்கை கூட்டமாய் நண்பர்கள். அவன் காதல் முரிந்த அர்த்தமில்லாத கதையை கேட்டு நான் அதிரவில்லை. ரமேஷ் செல்லவிருக்கும் பாதை முற்றிலும் தெளிவுற்றதாக உணர்ந்தேன்.

உலகை அதிர வைத்தவர் பிடெல் காஸ்ட்ரோ உலகை சிரிக்க வைத்தவர் சார்லே சாப்ளின் இருவருக்குமே முதல் காதல் தோல்வி தான் என்று புள்ளி விவரங்கள் சொல்லி தேற்றினான் கணேஷ்.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவது தானே நட்பு"

இருவருக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் தான் போய்க்கொண்டிருந்தது. ஏனோ இருவர் கண்களும் சந்திக்கும் அந்த நேர்கோடு தடம் மாறிப்போனது. மௌனத்தின் அலைவரிசையும் மாறிவிட்டது. இரண்டாவது சிறகும் வேட்டப்பட்டவனாய் ரமேஷ். சர்ச்சைகுள்ளாகும் சரித்திரமாய் மூவரும். அனுவின் கதிரியக்கம் தாக்கியது போல கணேசையும் தாக்கியது இன்னொரு பெண்ணின் காதல். கலைந்த குட்டைக்குள் இருக்கும் தவளைக் குஞ்சாய் சில காலம் சிந்தனை பிளவுற்று சுற்றினான். பிறகு அனுவின் கதிர்கள் திசை திரும்பியதால் தப்பினான். கல்லூரி காலமும் முடிந்தது. நாங்களும் கல்லெறியப்பட்ட தேனீக்களாய் பறந்து சென்றோம். எல்லோரும் பட்டம் பெற்றதே சாதனையாக அடுத்த கட்டத்திற்கு தாவினோம். கலைந்த குட்டை தெளிந்த பிறகு காணவில்லை கணேஷை. எல்லா வலைத்தளத்திலும் கூட தேடியாயிற்று அவன் கிடைத்தபாடில்லை. ஏமாற்றம் ரமேஷுக்கு மட்டும் இல்லை எங்களுக்கும் தான். சொல்லாமல் போவது தானே நல்ல பிள்ளைக்கு அழகு. அமெரிக்காவோ அல்லது லண்டனோ தஞ்சம் அடைந்திருப்பன் என்று முடிவுசெய்துவிட்டோம். இரை தேடி வட்டமடிக்கும் குருவிக் கூட்டமாய் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தோம். எங்களில் சிலர் கூடு கிடைத்து குடியேரிவிட்ட்டர்கள் சிலர் இன்னமும் வட்டமடிக்கும் வண்ணத்துபூசியாய். காலமும் வேகமாக நகர ஆரம்பித்துவிட்டது.

இன்னும் சுயம் தேடி அலைந்து கொண்டிருக்கும் சுப வேளையில், மிக சமீபத்தில் கணேஷை சந்திக்க நேர்ந்தது. என்னை பார்த்த பிறகும் அவனது பரவச அலைகளின் அளவை(unit) பூஜ்ஜியமாகவே இருந்தது. அவனிடம் சிறிய மாற்றம் தெரிந்தது. அந்த பழைய வசீகரம் இல்லை. பழுத்த பற்களுடன் வேப்பம்பழத்தில் கசியும் இனிப்பாய் பேசினான். ஒரு ரெஸ்டாரன்டில் அமர்ந்து பேசுகையில் ரமேஷையும், வர்ஷாவையும் கவனம் ஈர்தேன். அதற்கு அவன் தட்டில் ஸ்பூனால் கிருக்கியபடியே பேசினான் "ரமேஷ்.......ஷ் தெரியல மச்சி ". வர்ஷா மட்டும் ஹைதரபாத்தில் இருப்பதாக அவனிடம் இருந்து தெரியவந்தது. விடை பெற்று கிளம்பியதும் மனசு கேட்காமல் ரமேஷிற்கு ஒரு ஈமெயில் அனுப்பிவிட்டு சென்றேன். கீழ்வானம் சிவக்கையில் நான் வீட்டை அடைந்திருந்தேன். அப்போது ரமேஷிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. இவன் ஆர்வம் நான் அறிந்தது தான். அதனால் சலனம் ஏற்படவில்லை பதிலாக ஒன்று தோன்றியது மனிதனை மனிதன் மறப்பதும் மறுப்பதும் இயற்கை தானே. எப்போதும் சேர்ந்தே இருந்தால் பிரிவுக்கான அர்த்தம் தான் என்ன.

No comments:

Post a Comment