என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

13 February 2008

மழைக்கவிதை-2

எப்போது மழை வருமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே என்னை உன் குடைக்குள் அழைப்பாய்

எப்போது இடி இடிக்குமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே என் இடக்கையை உன் வலக்கையால் பிடித்துகொள்வாய்

எப்போது மின்னல் வருமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே இருக்க கண் மூடி என் பெயர் உச்சரிப்பாய்

எப்போது உன் மீது சேறு படுமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே கோபத்தோடு வெட்கப்படுவாய்

எப்போது காற்றடிக்குமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே உன் துப்பட்டா என் தலை துவட்டும்

எப்போது எனக்கு காய்ச்சல் வருமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே என் நெற்றியில் உள்ள பத்தோடு, பதினொன்றாய் கிடைக்கும் உன் முத்தம்


மழையோடு காத்திருக்கிறேன் நான்
மீண்டும் வருவாயா நீ?

No comments:

Post a Comment