என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

22 September 2008

செல்வியான செல்வனுக்கு

நண்பா,
உன் நடை உடை பாவணைகளில்
உனக்குள் ஒரு பெண்ணை கொண்டிருந்தாய்
உருவமும் பெண்ணாகிபோனது கண்டு பெருமிதம் - பிறகு
எதற்காக இந்த சமுதாய பயம்?

எழுந்து நில்
கண்களை திறந்து வை
காதுகளை மூடிக்கொள்
கேள்விகளுக்கு பதிலாய் நீயே நில்
வேல்விகளை தொடங்கிவிடு
தோல்விகளுக்கு தோள் கொடு
தாழ்வான மனதை தகர்த்திடு
தயக்கமான செயலை தவிர்த்திடு
தரமான பாதையை தேர்ந்தெடு
சுகமான வாழ்வை சுமந்திடு.................
இங்ஙனம்
இப்போதும்
உன் நண்பனான நான்