என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

16 February 2008

மழைக்கவிதை-4


தயவுசெய்து நனையாதே
உன்னை முத்தமிடுவதாய் கற்பனை
செய்கிறது மழை

-------------------------------------------------

நீ சிரித்தால்
இடி இடிகிறதென்று - என்
இதய வானில் மழை பெய்ய
ஆரம்பித்து விடுகிறது.

--------------------------------------------------

விண்ணில் கார்மேகத்தின் ஆடை களையப்பட
வெட்கம் தாளாமல்
மண்ணில் ஓடி மறைக்கிறது மழை.

13 February 2008

மழைக்கவிதை-2

எப்போது மழை வருமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே என்னை உன் குடைக்குள் அழைப்பாய்

எப்போது இடி இடிக்குமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே என் இடக்கையை உன் வலக்கையால் பிடித்துகொள்வாய்

எப்போது மின்னல் வருமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே இருக்க கண் மூடி என் பெயர் உச்சரிப்பாய்

எப்போது உன் மீது சேறு படுமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே கோபத்தோடு வெட்கப்படுவாய்

எப்போது காற்றடிக்குமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே உன் துப்பட்டா என் தலை துவட்டும்

எப்போது எனக்கு காய்ச்சல் வருமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே என் நெற்றியில் உள்ள பத்தோடு, பதினொன்றாய் கிடைக்கும் உன் முத்தம்


மழையோடு காத்திருக்கிறேன் நான்
மீண்டும் வருவாயா நீ?

06 February 2008

மழைக் கவிதை

வில்மரங்கள் விடும் காற்றம்பினால்
வலி தாங்காமல் அழுகிறது வானம்.
---------------------------------------------------------

நானும் அவளும் சந்தித்த
அந்த முதல் நாளில் பெய்த
மழையின் ஈரம் இன்னும் காயவில்லை
தொடர்கிறது கானல் நீராய்.
---------------------------------------------------------

மழை பெய்யும் பொழுது வரும்
"சோ" வென்ற சப்தம்
வாழ்வில் எத்தனை பேருக்கு
பின்னணி இசையாய்......?
---------------------------------------------------------

பெருவாரியான
ஆண்கள் அழும்போது
மறைய நினைப்பது
மழையில் தான்.
---------------------------------------------------------