என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

16 December 2007

நிராகரிப்பு

நிராகரிப்பு......கூர்வாளால் குத்துவதை விட கொடூரமானது. அது நிகழும்போது ஒருவன் என்ன மனநிலையில் இருக்கிறானோ அது தான் அவன் வாழ்வை தீர்மானிக்கிறது.சில நேரங்களில் சாவையும்.எப்போது நிகழ்கிறது அது?எதையாவது யாரிடமாவது எதிர்பார்க்கும் போது.நிராகரிப்பு மனிதன் பிறக்கும் போதே பிறந்ததா.இல்லை நாகரிகம் பிறந்தவுடன் வளர்ந்ததா. பரிமாணங்கள் வளர வளர இதுவும் வளர்ந்துவிட்டது.செயல் ஒன்று தான்,இடங்கள் தான் வேறு.

சிலர் பள்ளியில் ஆசிரியர்களால் நிராகரிரிக்கபடுகின்றனர், சிலர் பள்ளியை விட்டு கல்லூரிகளில் நிராகரிக்கப்படுகின்றனர், சிலர் வேலை தேடும்போது அல்லது வேலையில் சேரும்போது நிராகரிக்கப்படுகின்றனர்,சிலர் திருமணத்தின் போது,சிலர் நண்பர்களால், சிலர் எல்லாவற்றிலும் அங்கிகரிக்கப்பட்டு வெற்றியும் கண்டுவிடுவார்கள் ஆனால் தனது பிள்ளைகளால் நிராகரிக்கப்படுவார்கள்.சிலர் பிறந்தவுடனேயே நிராகரிக்க படுகின்றனர்.

ரயில் அல்லது பஸ் பயணங்களில் அருகில் இருப்பவர் பேச மறுத்தால் அது நிராகரிப்பா? தனக்கு பிடித்த பெண் தன்னை பார்க்க மறுத்தால் நிராகரிப்பா? பிச்சைக்காரன் தட்டை ஏந்தும் போது பிச்சையிட மறுத்தால் அது அவனை நிராகரிப்பதா? தப்புகள் செய்து தண்டனை அனுபவிக்கும் சிறை கைதிகளை நாம்(சமூதாயம்) நிராகரித்துவிட்டோமா? நாள் தவறாமல் குடித்துவிட்டு வரும் அப்பாவையோ,மகனையோ நாம் நிராகரிக்கிரோமா? பஜாரில் கர்சீப்பை விலை விசாரித்துவிட்டு வாங்காமல் போனால் அது கடைக்காரனை நிராகரிப்பதற்கான துவக்கமா? வெளிநாடு சென்று மிகக் குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் உள்நாட்டில் நிராகரிக்கப்பட்டதாக அர்த்தமா? ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை ஏற்க மறுக்கிறது அது எதை நிராகரிப்பதற்கு? ஒரு பெண் ஆணையோ அல்லது ஒரு ஆண் ஒரு பெண்ணையோ ஏற்க மறுப்பதும் நிராகரிப்பு தானா?ஒருவன் வளரும்போதே நிராகரிக்க தொடங்குகிறான்,ஒருவன் வளரும்போதே நிரகரிக்கப்படுகிறான்.எது இயல்பானது. நிராகரிக்கப்பட்டவன் ஒரு புள்ளியில் அங்கிகரிக்கப்படத்தான் வேண்டுமா? படுவானா?

நாம் பிறந்த உடன் உலகை நிராகரிக்கிறோம் கடைசியில் உலகம் நம்மை நிராகரிக்கிறது.நிராகரிப்பு என்பது வாழ்கையின் ஒரு அங்கம் ஆகிவிட்ட நிலையில் என்ன செய்வது.நிராகரிப்பு என்பது அங்கிகாரத்தின் எதிர்சொல் என்று கூட தெரியாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதன் அர்த்தம் நாளுக்கு நாள் மாறிவருவதாக தெரிகிறது.அர்த்தம் மாறுவது எதை குறிக்கிறது.எல்லோரும் அங்கிகரிக்கப்படுகின்றனரா?எல்லோரும் அங்கிகரிக்கப்படத்தான் வேண்டுமா?தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.

1 comment:

  1. இனிமையாக இருந்தது உங்களின் இந்த பதிவை வாசிப்பதற்கு.

    ReplyDelete