உன்னை முதல் முதலாய் பார்த்த போது
நீ சிந்திய வெட்கத்தின் ஓசை
இன்னும் என் காதுகளில்...
உன்னிடம் முதல் முதலாய்
பேசிய என் வார்த்தைகளின் வாசம்
இன்னும் என் நாசியில்...
உன்னிடம் பெற்ற முதல்
தேநீர் கோப்பை சுட்ட வடு
இன்னும் என் விரல்களில்...
உனது விழியால் விடுத்த முதல்
அழைப்பின் தாக்கம்
இன்னும் என் கண்களில்...
உனது கூந்தல் என் மேல் உதிர்த்த முதல்
மல்லிகை பூ
இன்னும் என் கைகளில்...
உனது முதல் தொலைபேசி அழைப்பின்
மணி துளிகள்
இன்னும் என் கடிகாரத்தில்...
இப்படிகாலத்தை வென்று விட முயற்சிப்பவர்களின்
பட்டியலில் கடைசியாய் நானும்.....
No comments:
Post a Comment