என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

13 January 2011

விதி விலக்கு

உன் விழிகளை பார்த்த பிறகு
உன்னையே சுற்றி வருகின்றன
மின்மினி பூச்சிகள் சிறைபடுத்திய
தன் இனத்தை திருப்பித்தர வேண்டி

உன் இதழ்களை பார்த்த பிறகு
மலர்ந்தவுடன் உதிர்த்து விடுகின்றன
ரோஜாக்கள்
உனது இதழ்கள் வேண்டி

உன் கன்னங்கள் பார்த்த பிறகு
வடிவம் மாறிப்போகின்றன
மாங்கனிகள்
உனது கன்னங்கள் வேண்டி

உன் விரல்கள் பார்த்த பிறகு
மீட்ட சொல்லி அழைக்கிறது
வீணை
உன் தொடுதல் வேண்டி

உன் பாதங்கள் பார்த்த பிறகு
இறங்கத் துடிக்கிறன
பனித்துளிகள்
மென்மையான இடம் வேண்டி

உன் செவிகள் பார்த்த பிறகு
வெக்கி தலை குனித்து
கேள்விக்குறியாகிறது
ஆச்சர்யக்குறி(!?)

உன் இடையில் தவழும்
கைப்பைக்குக் கூட கர்வம்
உன் இடையில் தவழ்வதால்

அக்றினைகளே ஆசைப்படும் பொழுது
நான் மட்டும் என்ன
விதி விலக்கா?

-இளயுகன்

No comments:

Post a Comment