என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

20 January 2009

அம்மா--மழை!




ஒரு மழை தினத்தன்று
என்னை நீ!
பெற்ற போது;
தொட்ட போது;
தொட்டிலில் இட்டபோது;
ஆரம்பித்த கதகதப்பு
ஆண்டுகளுக்குப் பின் - உன்னை
இடுகாட்டில்
இட்டதோடு மறைகிறது
மீண்டும் ஒரு மழை தினத்தன்று!
------------------------------------------

அன்று ஒரு மழை இரவில்
நிலா இல்லாமலே ஊட்டி விட்ட
நிலாச்சோறு நினைவிருக்கிறது
இன்று
நீ நிலவிடம்
நான் சோற்றிடம்
இது முரண்பாடா?
இடைவெளியா?
-------------------------------

3 comments: