தொலைநோக்குப் பார்வையை தொலைத்து விடுகிறேன்!
தோன்றுகின்ற வார்த்தைகளை தூக்கிலிடுகிறேன்!
கைது செய்யும் கண்களை கரைய வைக்கிறேன்!
சிந்தனையும் செயலயும் சிறையிலிடுகிறேன்!
எழுச்சி மிகுந்த எண்ணங்களை எரித்துவிடுகிறேன்!
இப்படி நிலவை விழுங்கிய இரவாய் விழித்திருக்க
நான் தோற்றுபோனவனா இல்லை?
உன்னுள் தொலைந்துபோனவனா?
No comments:
Post a Comment