என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

31 July 2010

தோழியாய்




தோழியாய்!!

முதன் முதலாய்
காதலைச் சொல்ல பயந்த எனக்கு
மீசை வலித்துவிடச் சொல்லி நீ கொடுத்த
ஒரு ரூபாய் நாணயம்
இன்னும் எனது பெட்டகத்தில்....

எப்போதாவது 
நல்ல மேல்சட்டையோடு வரும் எனக்கு
ஒரு புண் சிரிப்போடு நீ கொடுக்கும்
விமர்சனம்
இன்னும் எனது ஞாபகத்தில்....


எப்பொழுதும்
காசு இல்லாதபோது
கேட்டவுடனே நீ கொடுக்கும்
ரூபாய் நோட்டுகள்
இன்னும் உனக்கான எனது வங்கிக் கணக்கில்....


அளந்து அளந்து பேசும்
பெண்கள் மத்தியில்
நீ உதிர்க்கும்
சொற்க்களை
எண்ணி இருக்கின்றேன் மணிக் கணக்கில்....

நீ அழும்போதெல்லாம்
ஆறுதல் சொல்ல
நிறைய
வார்த்தைகள்
வைத்திருக்கிறேன் எனது அன்புக் கணக்கில்....

உன்னை அறியாமலே
நீ
விட்டுச்சென்ற உன்
கால் தடம்
இன்னும் எனது வாழ்க்கைக் கணக்கில்....

மீதமுள்ள வாழ்வையும்
வாழ்ந்துவிடு  தோழியே

என் தோழியாய்!!

1 comment:

  1. நன்று நண்பா! நல்ல கவிதை....

    ReplyDelete