என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

11 April 2010

இதையும் தாண்டி

சாலையில் பிச்சை எடுக்கும்
சிறுவர்கள்
காலையில் கடன் சொல்லும்
ஆத்மாக்கள்
போதையில் விழுந்து கிடக்கிற
குடிமகன்கள்
பாதையில் கடை விரிக்கும்
வியாபாரிகள்
பாடையில் பயணிக்கிற
நன்மக்கள்
நடைமேடையில் சண்டை போடுகிற
பேச்சாளர்கள்
சிலேடையில் சத்தியம் செய்யும்
அரசியல்வாதிகள்
பாத்திரம் அறிந்த
சாமிகள்
சூத்திரம் அறியா
ஆசாமிகள்
ஓடையில் குப்பை பொறுக்கும்
குழந்தைகள்
ஓடுக்கு கை நீட்டும்
பாமரர்கள்
எல்லோரும் நத்தையாய்
நகர்ந்துகொண்டிருக்க

அரக்க பறக்க அன்றாடம்
கணினியோடு மல்லுகட்டும்
நான்
முதல்முதலாய் ஊடுருவி பார்க்கின்றேன்
என்னை
சுற்றி உள்ள
கண்ணாடி சுவற்றின் வழியே
உந்திய வேகம் உரையும் வரை....

   

3 comments:

  1. Thank God! At last,at least you looked around..super.

    ReplyDelete
  2. ரசித்தமைக்கும் உமது பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete